தேவாரம் : தேவாரம் அருகே மல்லிங்காபுரம், தம்மிநாயக்கன்பட்டியில் ஆவின் சார்பில் 'பல்க் மில்க்' குளிரூட்டு மையங்கள் துவக்கப்பட்டன. இங்கு 5 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்டும் வசதி உள்ளது. நிர்வாக சிக்கல் காரணமாக சில மாதங்களாக பால் கொள்முதல் நிறுத்தப்பட்டிருந்தது.
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை ஏற்று குளிரூட்டு மையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு ஆவின் நிர்வாகம் கொண்டு வந்தது. மாவட்ட ஆவின் தலைவர் ராஜா துவக்கி வைத்தார். உத்தமபாளையம் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் கதிரேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் சோலைராஜ், தேவாரம் நகர செயலாளர் சீனிவாசன், ஆவின் மேலாளர் ராஜா குமார், துணை மேலாளர் சரவணன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE