நாமக்கல்: நாமக்கல்லில், 50 நாட்களுக்குபின் சேந்தமங்கலம் சாலையில் இறைச்சி கடைகள் திறந்ததால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் நகரில் மஜித்தெரு, பாவடி தெரு, சுண்ணாம்புகார தெரு உள்ளிட்ட பகுதிகளில், 23 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் இந்த பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவித்ததையடுத்து. நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையை உள்ளடக்கிய பகுதிகளுக்கு, 'சீல்' வைத்து தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. தற்போது அனைவரும் குணமாகி, வீடு திரும்பியதை தொடர்ந்து, கடந்த வாரம் இப்பகுதி மீதான தடை நீக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் இறைச்சி, மீன் கடைகள் அனுமதிக்கப்படவில்லை. இதற்கிடையே கடந்த, 50 நாட்களுக்கு பிறகு நேற்று நாமக்கல்-சேந்தமங்கலம் சாலையில், இறைச்சி கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, அனைத்து இறைச்சி மற்றும் மீன் கடைகளும் திறக்கப்பட்டன. இதனால் அசைவ பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க கடைகளின் முன் வட்டம் வரையப்பட்டு, கிருமி நாசினி வைக்கப்பட்டிருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE