கரூர்: கரூர் தாலுகா அலுவலக சுற்றுச்சுவர் மிகவும் மோசமாக இருப்பதால், அசம்பாவிதம் ஏற்படும் முன், பராமரிப்பு பணியில் ஈடுபடவேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர். கரூர் தாலுகா அலுவலகத்தின் சுற்றுச்சுவர் பகுதியில் உள்ள, சாக்கடை கால்வாய்கள் பல மாதங்களாக உடைந்த நிலையில் உள்ளன. இதனால், சுற்றுச்சுவரிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. எந்த நேரமும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. தாலுகா அலுவலகத்துக்கு வரும் பொதுமக்கள், சுற்றுச்சுவர் பகுதியில் அமர்கின்றனர். இதனால், ஏதேனும் விபத்து ஏற்படும் முன், சாக்கடை கால்வாயில் உள்ள உடைப்புகளை, சரி செய்து புதிதாக சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE