கோவையில் 15வது நாளாக இன்று புதிதாக யாருக்கும், 'கொரோனா' தொற்று கண்டறியப்படவில்லை.

கோவையை சேர்ந்த 17 பேர், டில்லி மாநாட்டில் பங்கேற்று, ஊரடங்கு காரணமாக சொந்த ஊர் திரும்ப முடியாமல் அங்கேயே தங்கியிருந்தனர். இந்நிலையில், சிறப்பு ரயில் மூலமாக திருச்சி வந்தனர். அங்கிருந்து, பிரத்யேக வாகனத்தில், கோவைக்கு இன்று அழைத்து வரப்பட்டனர்.
தற்போது, சுகாதாரத்துறையின் பிரத்யேக முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால் மட்டுமே வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். அதேபோல், கேரளாவில் இருந்து வந்த 75 பேருக்கு, கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE