கூடலுார்:கூடலுார், தனியார் பள்ளி மைதானத்தில் செயல்பட்டு வரும் காய்கறி, பழக்கடைகளை மார்க்கெட் பகுதிக்கு மாற்றிக்கொள்ள அதிகாரிகள் அனுமதி வழங்கினர்.கூடலுார் பகுதியில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, நகரில் உள்ள காய்கறி கடைகள் பழக்கடைகள் அனைத்தும், பழைய கோர்ட் சாலை, தனியார் பள்ளி மைதானத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டன. நடைபாதை கடைகள் உழவர் சந்தைக்கு மாற்றப்பட்டன. 'ஓரிரு வாரங்களில் பருவமழை துவங்கவுள்ளதால், அந்த கடைகளை சொந்த இடத்திற்கு மாற்ற அனுமதி அளிக்க வேண்டும்,' என, வியாபாரிகள் வலியுறுத்தினர்.இந்நிலையில், அந்த கடைகளை ஆர்.டி.ஓ., ராஜ்குமார் டி.எஸ்.பி., ஜெயசிங், தாசில்தார் சங்கீதாராணி ஆய்வு செய்தனர். பின், கடைகளை மாற்ற உத்தரவு வழங்கப்பட்டது.ஆர்.டி.ஓ., ராஜ்குமார் கூறுகையில், ''பருவமழை துவங்க உள்ளதால், வியாபாரிகளின் கோரிக்கையை ஏற்று, மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று, காய்கறி, பழ கடைகளை, மாற்ற அனுமதி வழங்கங்கப்பட்டது. அங்கு, சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE