ஊட்டி:நீலகிரியில் இருந்து இதுவரை, 266 வடமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்.நீலகிரியில், 7, 000க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 1,900 வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊர் செல்ல விருப்பமனு கொடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்தின் பரிசீலனைப்படி, சில மாநிலத்திலிருந்து உத்தரவு வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன், ஊட்டியில் பணிபுரிந்து வந்த, நாகாலாந்தை சேர்ந்த, 12 பேர் பஸ் மூலம் அனுப்பப்பட்டனர்.மேலும், தனியார் நிறுவனம் சார்பில், இ--பாஸ் அனுமதி பெற்று, நேற்று மூன்று தனியார் டிராவல்ஸ் பஸ் மூலம், 200 ஜார்க்கண்ட் தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றனர். அதில், ஊட்டியில் பிறந்து, 7 நாட்களான குழந்தையுடன், ராஜஸ்தான் செல்லும், தொழிலாளர் தம்பதி; மற்றும் அவர்களின் மற்றொரு குழந்தைக்கு,கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஜூஸ் வழங்கி வழி அனுப்பி வைத்தார். இவர்கள், கோவை; சென்னையில் இருந்து ரயில் மூலம் மீண்டும் பயணிக்க உள்ளனர். இதுவரை, 266 வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் சென்றுள்ளனர்.கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறுகையில்,''சம்பந்தப்பட்ட மாநிலத்தின் அனுமதியுடன் வடமாநில தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு படிப்படியாக சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பணி நடந்து வருகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE