ஊட்டி:ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர்களை பாதுகாத்து வளர்த்த தோட்டக்கலை துறை தொழிலாளர்களின் குடும்பத்தினர், தாவரவியல் பூங்காவை ரசிக்க அனுமதி வழங்கப்பட்டது.நடப்பாண்டு, ஊட்டி மலர் கண்காட்சி, கடந்த, 15ம் தேதி துவங்கி, 19ம் தேதி வரை நடப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.இதனால், அனைத்து மக்களும் கண்டுகளிக்கும் வகையில், பூங்கா நிர்வாகம், வண்ண மலர்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.இந்நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவில், மலர்களை பாதுகாத்து வளர்த்த தோட்டக்கலை துறை தொழிலாளர்களின் குடும்பத்தினர், தாவரவியல் பூங்காவை ரசிக்க, நேற்று அனுமதி வழங்கப்பட்டது. அவர்களுக்கு,தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் சிவசுப்ரமணி சாம்ராஜ் உட்பட பலரும் வரவேற்பு அளித்தனர். பின், அவர்கள், பூங்காவில் உள்ள, 35 ஆயிரம் மலர் தொட்டிகள்; 5 லட்சம் மலர்களை ரசித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE