புதுக்கோட்டை : கந்தர்வக்கோட்டை அருகே, 13 வயது சிறுமியின் மர்ம மரணம் குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை அருகே, நொடியூர் கிராமத்தைச் சேர்ந்த, 13 வயது சிறுமி, நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, அப்பகுதியில் உள்ள குளத்தில், தண்ணீர் எடுக்க சென்றுள்ளார்.நீண்ட நேரமாக வீடு திரும்பாத நிலையில், பெற்றோர் தேடி சென்ற போது, தைலமரக் காட்டுக்குள், பலத்த காயங்களுடன் கிடந்தார். சிறுமியை, தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி, நேற்று அதிகாலை உயிரிழந்தார். சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, நான்கு தனிப்படைகள் அமைத்து, சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்கின்றனர். சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், 'சிறுமி எப்படி இறந்தார் என்பது குறித்து, தீவிர விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இல்லையெனில் வழக்கை, சி.பி.சி.ஐ.டி., வசம் ஒப்படைக்க வேண்டும்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE