பொன்னேரி : வங்கி சேவை மையங்கள் கைவிரித்ததால், தபால் துறையினர், முதியோர் உதவித்தொகை மற்றும் நுாறு நாள் சம்பளம் ஆகியவற்றை, வீடுகளுக்கே வந்து வழங்கினர்.
மீஞ்சூர் ஒன்றியம், தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் நுாறு நாள் சம்பளம் ஆகியவற்றை பெற முடியாமல், கிராம மக்கள் தவித்து வந்தனர்.மேற்கண்ட பயனாளிகளுக்கு சேவை வழங்க வேண்டிய, வங்கி சேவை மையங்களும், பணம் வரவில்லை எனக் கூறி கைவிரித்தன.
கிராம மக்களின் சிரமத்தை கண்டு, தடப்பெரும்பாக்கம் ஊராட்சி நிர்வாகம், தபால் துறை அலுவலர்களிடம் மேற்கண்ட உதவித்தொகைகளை வழங்கும்படி கேட்டு கொண்டது.அதை தொடர்ந்து, உப்பரபாளையம், திருவேங்கிடபுரம் பகுதிகளை சேர்ந்த முதியோருக்கு, உதவித்தொகை, நுாறு நாள் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டது.இக்கட்டான நேரத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் தபால் துறையின் நடவடிக்கை பெரும் உதவியாக இருந்ததாக, கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE