புழல்: காற்றாடி பறக்கவிட்டவர்களிடம் இருந்து, காற்றாடி, மாஞ்சா நுால் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.
சென்னை, புழல் அடுத்த காவாங்கரை, சக்திவேல் நகர், ரெட்டேரி, கன்னடப்பாளையம், கதிர்வேடு, விநாயகபுரம் சுற்று வட்டாரங்களில், நேற்று முன்தினம் மாலை, பலர் காற்றாடி விளையாட்டில் ஈடுபட்டதாக, புழல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அங்கு சென்று கண்காணித்த போலீசார், 10 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து, காற்றாடி, மாஞ்சா நுால் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை, காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு, அவர்களுக்கு, காற்றாடி விளையாட்டின் விபரீதங்கள் குறித்து, போலீசார் விளக்கினர்.
'இனிமேல், காற்றாடி விளையாட்டில் ஈடுபடுவோர் சிக்கினால், வழக்குப் பதிவு செய்யப்படும்' என, போலீசார் எச்சரித்தனர். மேலும், இந்த விளையாட்டில், சிறுவர்கள் ஈடுபட்டால், அவர்களது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் எனவும், எச்சரித்து அனுப்பினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE