பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலை, சாயப்பட்டறை, விசைத்தறி கூடங்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள், சாயப்பட்டறை மற்றும் பல்வேறு தொழிற்கூடங்கள் செயல்பட்டு வருகின்றன. ஊரடங்கு உத்தரவால், கடந்த, 14ல் முதல் அனைத்தும் செயல்பட துவங்கியுள்ளன. நேற்று, நகரட்சி ஆணையாளர் இளவரசன், பொறியாளர் சரவணன் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து, ஆணையாளர் இளவரசன் கூறியதாவது: நகராட்சி பகுதியில் செயல்படும் விசைத்தறி கூடம் உள்பட அனைத்து தொழிற் கூடங்களிலும், பணிபுரியும் இடத்தில் தொழிலாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். குறைவான ஆட்களை கொண்டு பணி புரிய வேண்டும். கை கழுவ சோப்பு, தண்ணீர், கிருமி நாசினி வைக்க வேண்டும் என, அரசு அறிவித்துள்ள அனைத்து விதிமுறைகளையும் நடைமுறைபடுத்துகின்றனரா என, ஆய்வு செய்தோம். தொழிலாளர்களிடமும் விசாரணை செய்தோம். இவ்வாறு கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE