நாமக்கல்: நாமக்கல்லில், வக்கீல்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. நேற்று, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில், வக்கீல்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டது. கவுரவ செயலாளர் அய்யாவு தலைமை வகித்தார். இதில், 60 வக்கீல்களுக்கு, மாவட்ட முதன்மை நீதிபதி இளவழகன், உதவித்தொகை வழங்கினார். அரசு வக்கீல் தனசேகரன், மூத்த வக்கீல்கள் ரமேஷ், குணசேகர் உள்பட பலர் பங்கேற்றனர். இதேபோல், நாமக்கல் குற்றவியல் வக்கீல்கள் சங்க உறுப்பினர்கள், 150 பேருக்கு, கடந்த இரு மாதங்களாக நிவாரண பொருட்கள் மற்றும் 1,000 ரூபாய் வழங்கப்பட்டு வருவதாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE