ப.வேலூர்: 'பரமத்தி வட்டாரத்தில், மானியத்துடன் கூடிய சொட்டுநீர் பாசனத்தை மேற்கொள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்' என, வேளாண் உதவி இயக்குனர் ராதாமணி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: பரமத்தி வட்டாரத்திற்கு, 2020 - 2021ம் ஆண்டுக்கான சொட்டுநீர் பாசனம், 400 ஹெக்டேருக்கு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்புவோர் புகைப்படம், பட்டா, சிட்டா, அடங்கல், சிறு, குறு விவசாய சான்றிதழ், மண் நீர்ஆய்வு சான்றிதழ், ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களுடன், கீழ்கண்ட வேளாண் உதவி அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம். கவுசல்யா (இரும்புபாலம்) - 9361093437, பிரபு (ப.வேலூர்) - 6379658520, பூபதி (கூடச்சேரி) - 6381914472, நாகராஜன் (நல்லூர்) - 8220431970, விஜயகுமார் (பரமத்தி) - 9443290670. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE