செங்கல்பட்டு மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 560 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், 288 பேர் குணமடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
இந்நிலையில், நேற்று, தாம்பரம் - -16; பல்லாவரம் - 18; செங்கல்பட்டு - ஒன்பது, வண்டலுார் - ஐந்து; திருக்கழுக்குன்றம் - நான்கு; திருப்போரூர் மற்றும் வடமாநிலத்தவர் - தலா மூன்று என, மொத்தம், 58 பேர், வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதில், அணுசக்தித் துறை வசிப்பிடமான, கல்பாக்கம் பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஒரு சிறுவன், இரு பெண்கள் ஆகியோருக்கு, நேற்று, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் மொத்த பாதிப்பு, 618 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்படுகிறது.திருவள்ளூர்திருவள்ளூர் மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு, நேற்று முன்தினம் வரை, 571 ஆக இருந்தது. நேற்று, ஆவடி மாநகராட்சி, திருநின்றவூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, பாதிப்பு எண்ணிக்கை, 594 ஆக உயர்ந்தது. இதில், 191 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். எட்டு பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது, 395 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட அளவில், நேற்று முன்தினம் வரை, 208 பேர், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில், நேற்று, புதிதாக, 14 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.குன்றத்துார் தாலுகா - ஏழு; காஞ்சிபுரம் நகராட்சியில் இருவர்; மேல்பங்காரம், திருமுடிவாக்கம், பாலுசெட்டிசத்திரம், வடக்கு மலைப்பாக்கம், நந்தம்பாக்கம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவர் என, 14 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை, 222 ஆக உயர்ந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE