மதுராந்தகம் : கொரோனா வைரஸ் காரணமாக, கடந்த நாட்களில், சுங்கச்சாவடிகள் மூடப்பட்டன. இந்நிலையில், சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ஆத்துார் சுங்கச்சாவடி நேற்று திறக்கப்பட்டு, கட்டண வசூல் துவங்கியது.இதனால், காலை முதலே அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமானது. கார் உள்ளிட்ட வாகனங்களில், இ - பாஸ் உள்ளிட்ட முறையான ஆவணங்கள் உள்ளனவா என, சோதனை செய்யப்பட்ட பிறகே வாகனங்கள் அனுப்பட்டன.இதனால், சுங்கச்சாவடியில் நீண்ட துாரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. போக்குவரத்து நெரிசலால், வெயிலில் நின்ற இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE