பழவேற்காடு : 'அம்பான்' புயல் காரணமாக, பழவேற்காடு பகுதியில், கடல் சீற்றம் அதிகரித்து, கரையோர மீனவ கிராமங்களில் இருந்து, படகு மற்றும் வலைகள் சேதம் அடைந்தன.
கடல் சீற்றத்தால் கடல் நீர், கடற்கரையை கடந்து, பழவேற்காடு- - காட்டுப்பள்ளி சாலை வரை பாய்ந்தது.வங்காள விரிகுடா கடற்பகுதியை ஓட்டி அமைந்துள்ளது பழவேற்காடு மீனவப் பகுதி. 'அம்பான்' புயல் காரணமாக, இரு நாட்களாக, பழவேற்காடு பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.மீன்பிடி தடை காலம் காரணமாக, மீனவர் மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. இவர்களது, மீன்பிடி படகுகள் மற்றும் வலைகள் கடற்கரை மற்றும் ஏரிக்கரையில் ஓய்வெடுக்கின்றன.
புயல் காரணமாக, மீனவர்கள் படகு மற்றும் வலைகளை பாதுகாப்பாக கட்டி வைத்து உள்ளனர்.பழவேற்காடு கடற்கரை பகுதியை ஒட்டி அமைந்துள்ள கோரைகுப்பம் மீனவ கிராமத்தில், கடல் அலையால், மீன்பிடி படகு மற்றும் வலைகள் சேதம் அடைந்தன.கடல் சீற்றத்தால் கடல் நீர், கடற்கரையை கடந்து, பழவேற்காடு- - காட்டுப்பள்ளி சாலை வரை பாய்ந்தது. காளஞ்சி, பழைய சாட்டான்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், கடல் நீர் தேங்கியது. புயல் காரணமாக, பழவேற்காடு பகுதி மீனவ மக்கள் அச்சத்துடன் இருந்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE