சென்னை : 'கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பின், கைகளை நன்றாக கழுவுவது அவசியம்' என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில், கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பாதிப்பு தீவிரமாக உள்ளது. சென்னையில் மட்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 8,000ஐ நெருங்கி உள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திய பின், கை கழுவுவது அவசியம் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியின், 'டுவிட்டர்' பதிவு:சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள் வாயிலாக, கொரோனா நுண்கிருமி பரவும் என்பதற்கான சான்றுகள் இதுவரை இல்லை. எனினும், முன்கூட்டியே கவனமாக இருப்பது அவசியம். ஒருவரின் சுவாச துகள்கள் படிந்திருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதால், சில்லரை, ரூபாய் நோட்டுகள் பயன்படுத்திய பின், கைகளை சோப்பு மற்றும் தண்ணீரால் கழுவ வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE