திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே காதல் திருமணம் செய்து கொண்ட தாய்மாமனை தாக்கிய மைத்துனர்கள் 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.திருக்கோவிலுார் அடுத்த ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஏழுமலை, 26; கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த அவரது அக்கா மற்றும் தங்கையின் மகன்களான சம்பத், முருகன், சுரேஷ் ஆகியோர் கடந்த 17ம் தேதி ஏழுமலையை திட்டி மாற்று சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை எப்படி திருமணம் செய்யலாம் எனக் கேட்டு தாக்கினர்.பலத்த காயமடைந்த ஏழுமலை திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் சம்பத், முருகன், சுரேஷ் ஆகிய மூவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE