ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெளி மாநில தொழிலாளர்கள் ராமநாதபுரத்தில் 37 பேரும், ராமேஸ்வரத்தில் 60, கீழக்கரையில் 86, திருவாடானையில் 38, ஆர்.எஸ்.மங்கலத்தில் 169, பரமக்குடியில் 74 பேர் உட்பட 464 பேர் இன்று புறப்படும் சிறப்புரயிலில்சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படவுள்ளனர்.
தென்னக ரயில்வே சிறப்பு ரயில் ராமேஸ்வரத்தில் இருந்து இயக்கப்படவில்லை. மதுரையில் இருந்து இன்று (மே 21) மாலை 4:00 மணிக்கு புறப்படும். அங்கிருந்து சேலம், கூடூர், விஜயவாடா, நாக்பூர், ஹாஜிபூர், சார்ஷா, சுபல் ஸ்டேஷனுக்கு மே 23 மாலை 5:05க்கு சென்றடையும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில்உள்ள பயணிகள் அனைவரும் பஸ் மூலமாக மதுரைஅழைத்து செல்லப்பட்டு சிறப்பு ரயிலில்அனுப்பப்படுவார்களா, அல்லது ராமேஸ்வரத்தில் நிறுத்தப் பட்டுள்ள ரயிலில் மதுரை வரை பயணிகளை ஏற்றிச் சென்று சிறப்பு ரயிலுக்கு மாற்றப்படுவார்களா, எனகுழப்பமான நிலை ஏற்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE