சாயல்குடி:-கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கீழக்கரை, சிக்கல், சாயல்குடி, முதுகுளத்துார் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில், வாய் வைத்து ஊதி தொக்கு எடுக்கும் நாட்டு வைத்திய முறைகள் தற்போதைய சூழ்நிலைக்கு வேண்டாம், என சமூக ஆர்வலர்கள்கோரிக்கை விடுத்துள்ளனர்.
உப்புசம், வயிற்று வலி, செரிமானக்கோளாறு, வயிற்றுக்குள் மருந்து எடுத்தல் உள்ளிட்ட விஷயங்களுக்காக கிராமங்களில் ஒருசில வைத்தியர்கள் தொக்கு எடுக்கின்றனர். வைத்தியரின் வாயில் நீண்ட குழல் முனையும், நோயாளி வாயில் மறுமுனையை வைத்து உறிஞ்சி கழிவுப் பொருட்களை எடுத்து வெளியே போடுவார்கள். இதனால் கொரோனா தொற்று அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE