அனுப்பர்பாளையம்:திருப்பூர், சாமுண்டிபுரம் அறிவொளி வீதியை சேர்ந்தவர் லிங்கமூர்த்தி, 45, மனைவி கண்ணகி, 40, இவரது தங்கை மகன் கண்ணன், 30, இவர் அதே பகுதியில் வசித்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்த ராம் பிரபு, என்பவர் லிங்கமூர்த்தி, வீட்டு காம்பவுண்டுக்குள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். இதுகுறித்து, லிங்கமூர்த்தி கேட்டபோது, தகராறு ஏற்பட்டது.அங்கிருந்து சென்ற ராம் பிரபு, சிறிது நேரத்தில் ஒரு கும்பலை அழைத்து சென்று, லிங்கமூர்த்தி, மனைவி கண்ணகி, தங்கை மகன் கண்ணன், ஆகியோரை கத்தியால் குத்தி தப்பியது. இதில், மூன்று பேரும் படுகாயம் அடைந்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து, 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து, சாமுண்டிபுரம் அறிவொளி நகரை சேர்ந்த மீனா, 43, அவரது மகள் கீர்த்தனா, 21, மற்றும் உறவினர்கள் கஞ்சம்பாளையத்தை சேர்ந்த கண்ணன், 34, சாமுண்டிபுரம் அம்மன் வீதியை சேர்ந்த மகேஸ்வரன், 21, ஆகியோரை கைது செய்தனர்.தலைமறைவாக உள்ள ராம் பிரபு, அவரது சகோதரர் சூர்யாவை போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE