கூடலுார்:கூடலுார் பகுதியில், ஆட்டோ இயக்குவது தொடர்பான தகராறில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.கூடலுார் காமராஜ் நகரை சேர்ந்தவர் ராகுல், 32. ஆட்டோ டிரைவர். இவருக்கும், மேல் கூடலுாரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ரஞ்சித், 42, மற்றும் அவர் நண்பர்கள் இடையே, மேல் கூடலுார் பகுதியில் தகராறு ஏற்பட்டது. அதில் ராகுல் படு காயமடைந்தார். சிகிச்சைக்காக, அவர் கூடலுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இது தொடர்பாக, எஸ்.ஐ., மணிதுரை வழக்குப்பதிவு செய்து, மேல் கூடலுாரை சேர்ந்த ரஞ்சித், 42, பிரேம்ஜித், 30, விக்னேஷ், 27, முருகன், 34, ஆகிய நான்கு பேரையும் கைது செய்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE