3 பேர் கைதுஅவனியாபுரம்: இப்பகுதி துக்காராம் தெரு பால் வியாபாரி கருப்பசாமி 50. அவரது தெருவில் கார்த்தி, மணிகண்டன், மாரிமுத்து ஆகியோர் ஒரே டூவீலரில் தினமும் அதிவேகமாக சென்றனர். கண்டித்த கருப்பசாமியை கத்தியால் குத்தினர். மூவரையும் போலீசார் கைது செய்தனர்.அரிவாள் வெட்டு: இருவர் கைதுமேலுார்: கொட்டகுடி கண்ணன் 58. இவரது உறவினர்கள் சகோதரர்களான ராமச்சந்திரன் 37, விஜயகுமார் 41. மூவருக்கும் மணல் அள்ளுவதில் முன்விரோதம் இருந்தது. நேற்று முன்தினம் கண்ணனைஅரிவாளால் வெட்டியதாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.வி.ஏ.ஓ., காயம்திருமங்கலம்: திருப்பரங்குன்றம் தாலுகா நிலையூர் பிட்டில் வி.ஏ.ஓ.,வாக இருப்பவர் சேதுகந்தவேல். நேற்றுகூடக்கோவில் அருகே ரோட்டோரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது டூவீலர் மோதியதில் காயமடைந்தார். கூடக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.பேய் பயத்தில் தற்கொலைமதுரை: பாண்டிய வேளாளர் தெரு கோபி மகள் ரஞ்சினி 15. மாநகராட்சி பள்ளியில் 10ம் வகுப்பு படித்தார். இரு மாதங்களாக பேய் பயத்தில் இருந்தவர், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.மனைவி கொலை: கணவர் கைதுமேலுார்: திருவாதவூர் ஆண்டிபட்டியில் மே 17ல் ஆயம்மாள், அவரது கள்ளக்காதலர் அன்புநாதன் கொலை செய்யப்பட்டனர். இவ்வழக்கில் ஆயம்மாளின் அண்ணன் ஒன்றிய தி.மு.க., கவுன்சிலர் தமிழ்மாறன், உறவினர்கள் சதீஷ், ராஜா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஆயம்மாளின் கணவர் விமலை 30, போலீசார் கைது செய்தனர்.விஷம் குடித்த காதலன் இறப்புகொட்டாம்பட்டி: கீழநாட்டார்மங்கலம் கவுதம் 21. வஞ்சிப்பட்டி உறவினர் சேகர் மகள் பவித்ரா 19. இருவரும் காதலர்கள். இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவிக்கவே விஷம் குடித்தனர். இதில் கவுதம் இறந்தார். பவித்ரா சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE