பழநி:பழநியில் கொரோனா வைரஸால் பாதித்தோர் வசித்த அண்ணாநகர், மதினா நகர், பாலசமுத்திரம் பகுதிகள் தனிமை பகுதியாக கூறி சீல் வைக்கப்பட்டன. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் குணமானதால் இப்பகுதியில் அடைப்புகள் திறக்கப்பட்டன.
இதன்பின்னர் கிழக்கு பாட்டாளி தெரு, பெரியகலையமுத்துார் ஆகிய 2 பகுதிகள் தனிமைப்பகுதியாக தொடர்ந்தன. இங்கு தொற்று பாதித்தோரும் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி விட் டனர். இந்நிலையில் நேற்று மாலை மேற்கண்ட 2 பகுதிகளிலும் தடுப்புக்கள் அகற்றப்பட்டன.
தாசில்தார் பழனிச்சாமி, சுகாதார துணை இயக்குனர் ஜெயந்தி உத்தரவின் பேரில் பாட்டாளி தெருவில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், வட்டார மருத்துவ அலுவலர் ராஜேஷ்வரி, பெரியகலையமுத்துாரில் இன்ஸ்பெக்டர் சையதுபாபு, மருத்துவர் வினோத் பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE