திண்டுக்கல்:'திண்டுக்கல்லில் மானாவாரி வளர்ச்சி திட்டத்தில் 25 ஆயிரம் எக்டேர் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, வேளாண் இணை இயக்குனர் பாண்டித்துரை தெரிவித்தார்.
இந்தாண்டு 'மானாவாரி இயக்கம்' எனும் திட்டத்தில் 3 லட்சம் எக்டேரில் மானாவாரி விவசாயம் செயல்படுத்தப்பட உள்ளது. மானாவாரி நிலங்கள் 100 ஏக்கர் கொண்ட தொகுப்புகளாக பிரிக்கப்படும்.திண்டுக்கல்லில் 13 ஒன்றியங்களில் 25 ஆயிரம் எக்டேரில் இத்திட்டம் செயல்படுத்த உள்ளது.
இதில் விவசாயிகளுக்கு கோடை உழவு செய்ய ரூ.1,250 மானியம் வழங்கப்படும்.மேலும் பயிரிட மற்றும் ஊடுபயிர் விதைகள், உயிர் உரங்கள், விதை நேர்த்தி மருந்துகள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும்.
சிறப்பாக செயல்படும் விவசாய குழுக்களுக்கு ரூ.10 லட்சம் மானியத்தில் விளை பொருட்களை மதிப்பு கூட்டு செய்வதற்கான இயந்திரங்கள் வழங்கப்படும். ஆர்வமுள்ள விவசாயிகள் நில ஆவணங்கள், ஆதார், வங்கி பாஸ் புக் நகலுடன் வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என, அவர் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE