கம்பம்:கம்பத்தில் நேற்று முன்தினம் மணிகட்டிஆலமரம் பைபாஸ் ரோட்டில் வடக்கு போலீசார் ரோந்து சென்ற போது மினி பிக்கப் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதற்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 180 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக சின்னமனுாரை சேர்ந்த சந்தோஷ் 23, சுக்காங்கல்பட்டியை சேர்ந்த டிரைவர் முத்துச் செல்வன் 28, கம்பத்தை சேர்ந்த ஈஸ்வரி 45, சுகப்பிரியா 30, ஸ்வாதி 34, ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதில் தொடர்புடைய கம்பத்தை சேர்ந்த செல்லக்காளி 65,மனைவி வண்ணக்கிளி 50, ஜெயா 48, ஜெயக்குமார் 28, தப்பியோடி விட்டனர். விற்பனைக்காக ஊரடங்கு காலத்தில் மொத்தமாக கஞ்சாவை எங்கிருந்து கொண்டுவந்தனர் என விசாரணை நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE