தேனி:தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் பாதாள சாக்கடை திட்ட இணைப்பு வழங்கப் படாததால் மக்கள் பரிதவிக்கின்றனர்.பழனிச்செட்டிபட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் பாதாள சாக்கடைத்திட்டம் 8 வது வார்டு சுப்பிரமணியசிவா தெருவில் துவங்கியது. ஆனால் இதுவரை முழுமைபெறவில்லை. பாதாள சாக்கடை அமைத்த பகுதிகளில் ரோடு சீரமைக்காமல் விடப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பணிகள் சமீபத்தில் மீண்டும் துவங்கின. இப்பணிகளை விரைந்து முடித்து இணைப்பு வழங்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:பள்ளம்அன்னப்பராஜ், சுப்பிரமணியசிவா மேலத்தெரு : பாதாள சாக்கடை திட்டப்பணிகளை விரைந்து முடிக்க பேரூராட்சி முனைப்பு காட்டாமல் உள்ளது. அரசன் நகர், சஞ்சஞ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் தெருக்களில் பதிக்கப்பட்ட 'பேவர் பிளாக்' கற்கள் சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. டூவீலர்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்குவதும் தொடர்கிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
சுகாதாரக்கேடு
போதுராஜன், சுப்பிரமணியசிவா கீழத்தெரு: 2 ஆண்டுகள் கடந்த நிலையிலும் பாதாள சாக்கடை பணிகளை முடித்து இணைப்புக்கள் வழங்காமல் உள்ளன. இதனால் கழிவுநீரோடையில் தேங்கி சுகாதாரக்கேடு, துர்நாற்றம் வீசுவதோடு, கொசு உற்பத்தி அதிகரித்து காய்ச்சல் ஏற்படுகிறது. பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE