பொன்னேரி : சிகிச்சையில் இருந்த, நான்கு பேர் நலமுடன், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டதை தொடர்ந்து, பொன்னேரி அரசு மருத்துவமனை, கொரோனா தொற்றாளர் இல்லாத மருத்துவமனையாக மாறியுள்ளது.
பொன்னேரி அரசு மருத்துவமனையில், கடந்த, 7 முதல், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பெற்று வந்தோர், தொற்று பாதிப்பில் இருந்து விடுபட்டதை தொடர்ந்து, 72 மணி நேரம் கண்காணிக்கப்பட்டு, சளி, காய்ச்சல் இல்லை என்பதை உறுதி செய்த பின், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வந்தனர்.
கடந்த, 12 வரை, 43 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். அதில், 18 வரை, 39 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கடைசியாக, மூன்று பெண்கள், ஒரு குழந்தை உட்பட, நான்கு பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர். அவர்களும்,நேற்று, சிசிச்சை முடிந்து நலத்துடன் வீட்டிற்கு அனுப்ப்பட்டனர்.சிகிச்சையில் இருந்த அனைவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதை தொடர்ந்து, பொன்னேரி அரசு மருத்துவமனை, கொரோனா இல்லாத மருத்துவமனையாக மாறி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE