அரூர்: அரூரில், 80 தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆசிரியர்கள் நிவாரண பொருட்களை வழங்கினர். கொரோனா பாதிப்பை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், தன்னார்வலர்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி மாவட்டம், அரூரில், சுமை தூக்கும், சலவை மற்றும் கூலித்தொழிலாளர்கள் உள்ளிட்ட, 80 குடும்பங்களுக்கு, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தலா, 700 ரூபாய் மதிப்புள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அரிசி, பருப்பு, கோதுமை மாவு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட, 56 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அத்தியாவசிய பொருட்களை, அரூர் சப்-கலெக்டர் பிரதாப் வழங்கினார். இதில், தலைமையாசிரியர் ராணி, செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE