சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனல் காற்றுவீசக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த மையம் வெளியிட்ட அறிக்கை: அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் வட மாவட்டங்களில் அனல் காற்று வீசக்கூடும். அந்த பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகும். மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். தென் கிழக்கு அரபிக்கடல், கேரள கடற்கரை பகுதி, மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE