மேட்டூர்: தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர் வரத்து, வினாடிக்கு, 3,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இரு நாளுக்கு முன், கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., அணையில், வினாடிக்கு, 1,000 கனஅடி, கபினியில், 700 கனஅடி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது. அதேநேரம், தமிழகம் - கர்நாடகா எல்லையில், கோடை மழையும் தீவிரமடைந்தது. இதனால், தமிழக எல்லையிலுள்ள பிலிகுண்டுலு காவிரியாற்றில் நீர்வரத்து வினாடிக்கு, 1,000 கன அடியாக இருந்த நிலையில், நேற்று மதியம், 3,000 கனஅடியாக அதிகரித்தது. இதன்மூலம், நேற்று காலை, மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு, 1,336 கனஅடியாக இருந்த நிலையில், நீர்வரத்து இன்று மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று, அணை நீர்மட்டம், 100 அடி, நீர் இருப்பு, 64.84 டி.எம்.சி.,யாக இருந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE