திருவாடானை:திருவாடானை அருகே தினையத்துார், தேளூர் உள்ளிட்ட சில கிராமங்களை சேர்ந்த ஆறு பேர் ஆந்திராவில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.
கருமொழி செக்போஸ்ட்டில் வழிமறித்த போலீசார் அனைவரையும் திருவாடானை அரசு கல்லுாரியில் தனிமைப்படுத்தினர்.இது குறித்து அவர்கள் கூறுகையில், ஆந்திராவில் புறப்படும் போதே தனிமையில் தங்கியிருந்து கொரோனா அறிகுறி இல்லை என்ற சான்றுடன் வந்துள்ளோம். இங்கும் தனிமைப்படுத்துவது கவலை அளிக்கிறது. எனவே எங்களை ஊருக்கு அனுப்ப வேண்டும், என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE