உளுந்துார்பேட்டை: ஊரடங்கு தருணத்தில் சிறு கடன்கள் அளித்த நிதி நிறுவனங்கள் கடனை கட்ட சொல்லி வற்புறுத்துவதாக பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் மனு கொடுத்தனர்.இதுகுறித்து உளுந்துார்பேட்டை, கார்னேஷன் தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி முத்துமாலா என்பவர் 20 பெண்களுடன் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள மனு:நான், சிறு கடைகளை வைத்து பிழைக்கும் 100க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ஒரு சில நிறுவனங்கள் மூலம் 30 ஆயிரம் ரூபாய் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கிக் கொடுத்துள்ளேன்.ஊரடங்கால், கடந்த இரண்டரை மாதங்களாக இந்த கடனை பெற்றோர் யாரும் பணிகளுக்கு செல்லவில்லை. இதனால் இவர்களின் குடும்பம் கஷ்டப்படும் சூழலில், கடன் தொகையை கேட்டு, அந்த நிறுவன ஊழியர்கள் தினந்தோறும் எங்களை தொந்தரவு செய்கின்றனர்.ஊரடங்கு முடிந்து நாங்கள் மீண்டும் பணிக்குச் சென்றால்தான், கடனை திரும்பச் செலுத்த முடியும். அதுவரை, அவர்கள் எங்களை தொந்தரவு செய்யாத வகையில் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.மனுவை பெற்ற போலீசார் நிறுவன ஊழியர்களை அழைத்து பேசுவதாக கூறியதைத் தொடர்ந்து கலைந்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE