விழுப்புரம்; விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் இசைக் கலைஞர்கள், முடித்திருத்துவோர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கி இசைக் கலைஞர்கள், முடித்திருத்துவோர் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் 1000 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்.மாவட்ட அவைத்தலைவர் புகழேந்தி, பொருளாளர் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலாளர்கள் செயச்சந்திரன், புஷ்பராஜ், நகர செயலாளர் சக்கரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE