வால்பாறை:வால்பாறை அடுத்துள்ள சோலையாறு எஸ்டேட் மூன்றாம் பிரிவை சேர்ந்தவர் சுரேஷ்குமார். எஸ்டேட் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். கல்லார் எஸ்டேட் பகுதியில் இருந்து, வாலிபர்கள் சோலையாறு எஸ்டேட் பகுதிக்கு வந்துள்ளனர்.அங்கு வந்த சுரேஷ்குமார், எஸ்டேட்டுக்குள் நுழைந்த வாலிபர்களை விசாரித்துள்ளார்.ஆத்திரமடைந்த வாலிபர்கள், சுரேஷ்குமாரை தாக்கினர். புகாரின் பேரில், வால்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லார் எஸ்டேட்டை சேர்ந்த ஆனந்த், 18; சித்தார்த், 20; அருண்குமார், 22; ரமேஷ், 21, ஆகியோரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE