போத்தனூர்:வெள்ளலூர் எம்.ஜி.ஆர்.. வீதி, வடக்கு பகுதியிலுள்ள, ஒரு வீட்டில் மது விற்கப்பட்டு வந்துள்ளது. இதுகுறித்து நேற்று அப்பகுதியிலுள்ள பெண்கள், போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவ்வீட்டின் முன்பும் கூடினர்.அங்கு சென்ற எஸ்.ஐ., உதயகுமார், மது விற்பனை செய்த ரங்கநாதன் மனைவி மாசிலாமணி, 38 என்பவரை கைது செய்தார். 10 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வழக்கு பதிவு செய்த போலீசார், பெண்ணை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE