ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி அருகே பொறியியல் கல்லுாரியில் தனிமைப்படுத்தப்பட்ட வேலுச்சாமி 44, நெஞ்சுவலியால் இறந்தார்.
ஆண்டிபட்டி பாலக்கோம்பையை சேர்ந்தவர் வேலுச்சாமி. மும்பை தாராவியில் குடும்பத்துடன் வசித்து இட்லிக்கடை நடத்தினார். கொரோனா ஊரடங்கில் தவித்தவர்கள் அங்கிருந்து பாலக்கோம்பைக்கு திரும் பினார்.
மே 19 ல் தேனி மாவட்டத்திற்கு வந்த அவர்கள் ஆண்டிபட்டி திம்மரசநாயக்கனுார் சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அனைவருக்கும் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டு அங்குள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு அங்கு வேலுச்சாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். ஆண்டிபட்டி போலீசார் விசாரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE