பேரூர்:பேரூர் பட்டீஸ்வரர் கோவில் மற்றும் சின்ன கோவிலில், கிருமி நாசினி கரைசல் ஸ்ப்ரே செய்யப்பட்டது.கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள், ஜூன் முதல் வாரத்தில் திறக்க வாய்ப்பு உள்ளதாக, தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதனால், பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில், கோவிலில் நேற்று மதியம் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன.கோவை தெற்கு தீயணைப்பு மீட்பு பணி நிலையம் சார்பில், கோவில் உட்புறம், வெளிப்புறம் மற்றும் கதவு கைப்பிடிகள் உள்ளிட்ட பகுதிகளில், கிருமி நாசினி கரைசல் தெளிக்கப்பட்டது. உப கோவிலான சின்ன கோவிலிலும், கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE