பந்தலுார்:பந்தலுார் பஸ் ஸ்டாண்டில் செயல்பட்ட காய்கறி கடைகள்,சொந்த கட்டடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டன.கொரோனா காரணமாக, பந்தலுாரில் செயல்படுத்தப்பட்ட, 20க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் அனைத்தும், புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில், 40 நாட்களுக்கு மேலாக செயல்படுத்தப்பட்டு வந்தன. தற்போது, ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட நிலையில், 20 காய்கறி கடைகள், ஏற்கனவே இருந்த கட்டடத்துக்கு, இடமாற்றம் செய்யப்பட்டன. 'இப்பகுதியில், சமூக இடைவெளியுடன் மக்களுக்கு காய்கறி வழங்க வேண்டும்,' என, நெல்லியாளம் நகராட்சி அறிவுறுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE