கோத்தகிரி:கோத்தகிரி அருகே, உள்ள பில்லிக்கம்பை, ஒன்னதலை, சுப்ரமணியபுரம் மற்றும் காந்திநகர் ஆகிய கிராமங்களில், அ.தி.மு.க., சார்பில், காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது.ஊட்டி ஒன்றிய செயலாளர் பெள்ளி தலைமை வகித்தார். இந்து அறநிலைய துறை தலைவர் குண்டன், ஆவின் துணைத் தலைவர் குமார், மாவட்ட கவுன்சிலர் சசிகலா ஆகியோர் முன்னிலையில், 1,000 குடும்பங்களுக்கு, காய்கறி தொகுப்பு வழங்கப்பட்டது. இதில், கூட்டுறவு சங்க தலைவர்கள் கில்லன், பொன்னன், முன்னாள் தலைவர் பசவராஜன், சந்திரமோகன் மற்றும் நந்தகுமார் உட்பட, பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE