திருவெண்ணெய்நல்லுார்:திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டிக்கு விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு இடம் இன்றி, சாலையிலே வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த மழையில் சாலையில் வைத்திருந்த 200க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் நனைந்தன. இதனால், விவசாயிகள் நெல் மூட்டைக்கு விலை போகாது என கவலையடைந்துள்ளனர். விவசாயிகள் நலன்கருதி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE