விழுப்புரம்; விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலையில் திரிந்த 11 ஆயிரத்து 58 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டத்தில், கொரோனா ஊரடங்கு உத்தரவை மீறி, நேற்று முன்தினம் 20ம் தேதி சாலையில் சுற்றிய வாகன ஓட்டிகள் மீது 122 வழக்குகளை போலீசார் பதிவு செய்து, 122 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தடை உத்தரவை மீறியதாக, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் கடந்த 20ம் தேதி வரை 10 ஆயிரத்து 776 வழக்குகள் பதிவு செய்து, 11 ஆயிரத்து 58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை 7,564 இருசக்கர வாகனங்கள், 193 மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் 182 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE