வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பின்புறமுள்ள டாஸ்மாக் கடைக்கு, நேற்று காலை, 35 வயது மதிக்கத்தக்கவர் வந்தார். தொடர்ந்து, 3 குவார்ட்டர் வாங்கி, அருகிலுள்ள முட்புதரில் அமர்ந்து குடித்தார். தனியாக வந்த அவர், அளவுமீறி குடித்த நிலையில், அங்கேயே மயங்கி விழுந்தார். மதியத்துக்கு மேலும், அப்படியே கிடந்ததால், மது வாங்க வந்தவர்கள், அருகே சென்று பார்த்தபோது, அவர் இறந்தது தெரிந்தது. பின், ஆட்டையாம்பட்டி போலீசார், அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE