ஆத்தூர்: ஆத்தூர், புதுப்பேட்டையைச் சேர்ந்தவர் செல்வம், 43. இவர், அதே பகுதியில் சலூன் கடை வைத்துள்ளார். நேற்று, அவரது தம்பி செந்தில், 40, இவரது மகன் ஹரிஹரன், 19, ஆகியோர், சலூன் கடைக்கு சென்று, சொத்து பிரச்னையில் தகராறு செய்துள்ளனர். அதில், இருவரும், செல்வத்தை தாக்கி மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, செல்வம் புகார்படி, ஆத்தூர் டவுன் போலீசார், செந்தில், ஹரிஹரன் மீது, கொலை மிரட்டல் உள்பட நான்கு பிரிவில் வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE