மல்லூர்: முன்விரோதத்தில், அ.தி.மு.க., ஒன்றிய மகளிரணி தலைவி கொல்லப்பட்டது தெரியவந்தது.
மல்லூர் அருகே, சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் சாந்தா, 45; அ.தி.மு.க., ஒன்றிய மகளிரணி தலைவியாக இருந்த இவர், பெரமனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க இயக்குனர், கிழங்கு மாவு வியாபாரம் செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, 'ஸ்கூட்டி'யில் சென்ற சாந்தா, கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, சந்தியூர் ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த ரமேஷ், 29, என்பவரை, நேற்று, மல்லூர் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் முதல், சாந்தா, உள்ளூர் கட்சியினர் இடையே முன்விரோதம் உருவானது. கடந்த மாதம் சாந்தா இயக்குனராக இருந்த கூட்டுறவு சங்கம் மூலம், 'கொரோனா' நிவாரணம், 1,000 ரூபாய், மக்களுக்கு வழங்கப்பட்டது. அதை, சாந்தா முன்னின்று, மக்களுக்கு வழங்கினார். அப்போது, சாந்தா, கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அத்துடன், கோவிலில் மேளம் அடிக்கும் உரிமை பெறுவதில், சாந்தா, ரமேஷ் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில், சாந்தா கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE