சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்தியாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையினை மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் இன்று மட்டும் 786 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளன. இதில் சென்னையில் இன்று மட்டும் 569 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.

சென்னையில் ஏற்கனவே 20-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று அரசு ஸ்டாலின் மருத்துவமனை டீனுக்கு உடல் பரிசோதனை செய்ததில் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE