பண்ருட்டி; முந்திரி தொழிலாளர்களுக்கு நிவாரணம் 1500 ரூபாய் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் செல்வமணி,முந்திரி ஏற்றுமதியாளர் சதிஷ்ஆரோக்கியராஜ் ஆகியோர் தமிழக முதல்வர், துணைமுதல்வர், வேளாண்துறை செயலர் ககன்தீப்சிங்பேடி ஆகியோரிடம் கோரிக்கை மனுஅளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த முந்திரி தொழிலாளர்களுக்கு 1500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.கூட்டுறவு துறை மூலம் அங்காடிகளில் அரசால் விற்பனை செய்யப்படும் 500 ரூபாய் மளிகை தொகுப்பில் முந்திரி பருப்பை இணைத்து வழங்கிட முந்திரி பருப்பு கொள்முதல் செய்திட வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE