கிணத்துக்கடவு:கிணத்துக்கடவில் இருந்து, வீரப்பகவுண்டனுார் வழியாக லாரிகளில் அதிக பாரம் ஏற்றி செல்வதால், ரோடு சேதமடைகிறது.கிணத்துக்கடவில் இருந்து, வீரப்பகவுண்டனுார் வழியாக கேரளா மாநில எல்லை வரை தார்ரோடு போடப்பட்டுள்ளது. இவ்வழியாக லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. கேரளாவுக்கு செல்லும் லாரிகள் அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி செல்வதால், தார் ரோடு பழுதடையும் வாய்ப்புள்ளது.இவ்வழித்தடத்தில், கேரளா எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் உள்ளதால், முத்துக்கவுண்டனுார், ரங்கேகவுண்டன்புதுார் வழியாக கேரளா மாநிலத்திற்கு வாகனங்கள் சுற்றி செல்கின்றன. அளவுக்கு அதிகமான உயரத்துக்கு, பாரம் ஏற்றி செல்லும் லாரிகளை கட்டுப்படுத்த, கேரளா எல்லை பகுதி ரோட்டில் செக்போஸ்ட் அருகே, இரும்பு நுழைவாயில் அமைக்க வேண்டும்.இதற்கு, கிணத்துக்கடவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE