ஆனைமலை:ஆனைமலை ஒன்றிய பகுதிகளில், மேம்பாட்டு பணிகளை, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆய்வு செய்தார்.ஆனைமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட, திவான்சாபுதுார், பெரியபோது, வாழைக்கொம்புநாகூர் பகுதிகளில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ரமேஸ்குமார் ஆய்வு செய்தார். பி.டி.ஓ.,க்கள் பாலசுப்ரமணியன், லதா மற்றும் உதவி செயற்பொறியாளர் ஆறுமுகம் உடனிருந்தனர்.பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்படும், சுகாதார பூங்கா, ஊரக பகுதிகளில் கட்டப்படும் பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்ட பணிகளை ஆய்வு செய்தார். மேலும், வேலை உறுதித்திட்டத்தில் நடைபெறும், விவசாய மேம்பாட்டு பணிகளை பார்வையிட்டார்.மேலும், வீடு இல்லாத மக்களுக்கு, பசுமை வீடு, பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டங்களில் வீடு கட்டித்தர வேண்டும். தற்போது, வீடு கட்டுவோருக்கு, சிமென்ட், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என, அதிகாரிகளை அறிவுறுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE