புதுச்சத்திரம்; புதுச்சத்திரம் சுற்றுப் பகுதியில் வைகாசி பட்டத்திற்கு வேர்கடலை பயிரிடும் பணி துவங்கியுள்ளது.புதுச்சத்திரம் அடுத்த வேளங்கிப்பட்டு, பால்வாத்துண்ணான், சேந்திரக்கிள்ளை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்தங்கள் மானாவாரி நிலத்தில் வைகாசி பட்டத்தில் வேர்கடலை பயிரிடுவது வழக்கம். அதையொட்டி இந்தாண்டு பட்டத்திற்குகடந்த சில நாட்களாக வேர்கடலை பயிரிடும் பணி நடக்கிறது.அதையொட்டி இப்பகுதி விவசாயிகள் தங்கள் நிலத்தில் இயற்கை உரமிட்டு, உழுது சமன் செய்தனர். தொடர்ந்து வேர்கடலைவிதை நேர்த்தி செய்து, பெண்கள் மூலம் வேர்கடலை பயிரிடும் பணி நடக்கிறது. சில விவசாயிகள் நஞ்செய் நிலத்திலும்இந்தாண்டு வேர்கடலை பயிரிடுகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE